27 06 25 தமிழ்நாட்டின் வளர்ச்சி கடந்த 3ஆண்டுகளில் 8% உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்… சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 3ஆண்டுகளில் 8% உயர்ந்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.இந்திய நகரங்களில் வாழக்கூடிய சூழல்களை உருவாக்குவது குறித்த சிஐஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சி கடந்த 3ஆண்டுகளில் 8% உயர்ந்துள்ளது என தெரிவித்தார். “தமிழ்நாடு அரசும் – இந்திய தொழில் கூட்டமைப் பும் பல ஆண்டு காலமாக இணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், CII கூட்டமைப்பு, தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு செய்து வரும் முயற்சிகளுக்கு, என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை…
01 06 25 ஆர்.எஸ்.எஸ். வியூகம் தமிழ்நாட்டில் தோற்பது உறுதி! கொள்கை எதிரிகளோடு கூட்டணி வைக்கும் கட்சிகளாலும் –சினிமா ரசிகத் தன்மையை அரசியலாக்கும் கட்சிகளாலும் தமிழ்நாட்டுஉரிமைக்குக் குரல் கொடுத்து, வலுவான கூட்டணி அமைத்து நல்லாட்சி நடத்திவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைக்க முடியாது! தமிழ்நாட்டு உரிமைக்காகக் குரல் கொடுத்து நல்லாட்சி புரியும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. ஆட்சியை – கொள்கை எதிரிகளோடு கூட்டு சேரும் கட்சிகளால், ‘சினிமா ரசிகர் மன்ற கட்சி’களால் அசைத்துப் பார்க்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் கொள்கைக் கூட்டணி அமைத்து (எதிர்க்கட்சியாக இருந்த காலம்முதல் சுமார் 8, 9 ஆண்டுகளாகவே கூட்டணியாக இருந்து பொறுப்புடன் தமிழ்நாட்டு உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும், அறப்போராட்டங்கள் நடத்தியும்), ஆளுங்கட்சியாக தி.மு.க. கடந்த நான்கு ஆண்டுகளாக…
22 05 25 மாநிலப் பட்டியலில் கல்வி!# பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய, ‘தேசியக் கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களும் மிகமிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள். ‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்’ என்பதுதான் அந்தக் ரிக்கை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி அவர்கள் முன்னிலையில் பேசும் போது முதலமைச்சர் அவர்கள் இதே கருத்தை வலியுறுத்தினார்கள். அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது கல்வியானது, மாநிலப்பட்டியலில்தான் இருந்தது. 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது கல்வியானது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 42 ஆவது சட்டத்திருத்தம் மூலமாக இது செய்யப்பட்டது. 1976 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 246, ஏழாவது…
12 05 25 நீதியின் அடைக்கலம் வடஇந்தியாவில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு, மதவெறி தலைவிரித்தாடுகிறது. மனிதர்கள் வாழத் தகுதியற்ற சூழலாக மாறிவரும் அந்த மாநிலங்களை விட்டு, நியாயம் தேடி டாக்டர் கபீல் கான், முகமது ஸுபைர், குணால் காம்ரா போன்றோர் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். தமிழ்நாடு ஏன்? ஏனெனில், இங்கு மட்டுமே ஜனநாயகம் மனிதாபிமானம் வாழ்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நிகழ்வுகள் இருந்தாலும் அந்த வினைகளுக்கெல்லாம் எதிர்வினைகள் தண்டனைகள் எப்படி இருக்கிறது என்பதில் இருக்கிறது அவர்களது நடுனிலமை. டாக்டர் கபீல் கான்—கோரக்பூரில் 2017ல் BRD மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் உயிரிழந்தபோது, சொந்த செலவில் சிலிண்டர்கள் வாங்கி உயிர்களைக் காப்பாற்றினார். எல்லோரும் “ஹீரோ” வாக கொண்டாடினார்கள். ஆனால், ஒரு முஸ்லிம் ஹீரோவா? “இது நமக்கு ஆபத்து” என யோகி அரசு அவரை பலிகடாவாக்கியது. “எப்படி ஒரு முஸல்மான் இந்து குழந்தைகளைக்…
03 05 25 இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 2 பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது இறுதிக் காலத்தில் உறுதியாய் பேசியதில் அதிகம் மாநில சுயாட்சிக் கருத்துக்களைத்தான்! 1968 ஜூலை மாதம் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் அண்ணா, “இது அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சிகளின் கோரிக்கை அல்ல” என்றார். 1969 ஜனவரி மாதம் ‘காஞ்சி’ பொங்கல் மலரில் எழுதிய முதலமைச்சர் அண்ணா, “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்கள் பெறத் தக்க வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்” என்று எழுதினார். இதே கருத்தை ‘ஹோம் ரூல்’ பத்திரிக்கையிலும் முதலமைச்சர் அண்ணா எழுதினார்; “வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக்கூறி நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற நமது அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும்…