22 04 2015  அமிர்தலிங்கம் வாழ்க்கை வரலாறு 2 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதொடர் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். தொடர்.........
05 05 2015 சேர் பொன்னம்பலம் அருணாசலம் பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14, 1853 - ஜனவரி 9, 1924, கொழும்பு, இலங்கை) அவர்கள் சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். அவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் (சேர் முத்து குமாரசுவாமியின்சகோதரி) மூன்றாவது மகனாக 1853 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தார். குமாரசாமி முதலியார்,சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது சகோதரர்கள். இவரது தாய் மாமனாரான சேர். முத்துக்குமாரசுவாமியின் கண்காணிப்பில் கொழும்பிலேயே வளர்ந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இங்கு கல்வி கற்றபோது 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும்…
20 04 2015 அமிர்தலிங்கம் வாழ்க்கை வரலாறு   அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். ( 4th august 1977 -> 24th october 1983 ) இதுவரைக்கும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ஒரே தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.
20 05 2015 சேர் பொன்னம்பலம் இராமநாதன்  சேர் பொன்னம்பலம் இராமநாதன் (ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். வாழ்க்கை வரலாறு பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு,…
thinakkural.lk 04 08 2014  உலகத் தமிழரின் பேரபிமானம் பெற்ற "தமிழ்த் தூது' தனிநாயகம் அடிகள் "தமிழ்த்தூது' தனிநாயகம் அடிகளைப் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்று பொதுவாகக் கூறலாம். எந்த வகையில் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று வினவினால் உடனே அவர்கள் கூறுவது. "உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை' ஆரம்பித்து வைத்தவர் என்றும், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த விழா ஒரு தமிழ் எழுச்சி விழாவாக நடந்தது என்பதுமாகும். தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி மகாகவி பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்' என்றும் தன்னுடைய கற்பனை வேட்கையைக் கவியாக வடித்துவைத்தான். இதே பாரதிதான் "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெறுவதற்கு…