18 08 2016

குறட்டையை தடுக்கும் நவீன கருவி

தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங்கினால்தான் மனம் புத்துணர்ச்சி அடையும். உடலின் வளர் சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். செல்கள் புத்துணர்ச்சி பெறும். தூக்கமில்லாவிட்டால் உடலின் செயல்பாடுகள் நன்றாக நடைபெறாது. பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். இதெல்லாம் சரி தூங்கும் போது பக்கத்தில் உறங்கியிருப்பவர் குறட்டை விட்டால் மற்றவர்கள் எப்படி தூங்குவது? என்று கேட்கிறீர்களா..?

Read more ...
11 08 2016

மூக்கடைப்பிற்கு ஆவி பிடிப்பது பலனளிக்குமா..?

மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையை மேற்கொள்வது பலன் தரும் என்று தான் இது வரை கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சௌதாம்டன் பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள் நாள்பட்ட மூக்கடைப்பிற்கு ஆவி பிடிக்கும் சிகிச்சை மட்டுமே தொடர்வது முழு பலனைத்தராது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் நாள்பட்ட மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையுடன் வேறுசில சிகிச்சைகளையும் இணைத்து கூட்டு சிகிச்சையாக அளிக்கும் போது தான் பலன் கிடைக்கும் என்றும், ஆவி பிடிக்கும் சிகிச்சையை மட்டும் தொடர்ந்தால் மூக்கடைப்பு குணம் ஆகாதது மட்டுமில்லாமல் வேறு சில பக்க விளைவுகளையும் ஒரு சிலருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Read more ...
04 08 2016

மூளை புற்றுநோயை குணப்படுத்தும் நவீன லேசர் சிகிச்சை

மூளை புற்றுநோய், எதிர்பாராத விதமாக மூளையில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்துதல் மற்றும் மூளை பக்கவாதம் ஆகியவற்றை குணப்படுத்துவதற்காகவும், மூளையில் லேசர் சிகிச்சையை மேற்கொள்வதை எளிதாக்கவும் தற்போது மூளைக்கு வெளிப்புறத்தில் அதாவது மண்டையோட்டின் உட்புறத்தில் பொருத்தக்கூடிய வெளிப்படைத்தன்மையான மருத்துவ கருவியொன்றும், இதனூடாக செலுத்தப்படும் நவீன லேசர் சிகிச்சையொன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

Read more ...
28 07 2016

வறண்ட கண்களை குணப்படுத்தும் நவீன மருந்து.!

 இன்றைய திகதிகளில் அலுவலகம், வீடு, பயணம் என அனைத்து நேரங்களிலும் ஆண்களோ பெண்களோ கணினி, தொலைபேசி, தொலைகாட்சி என பலவற்றை கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் அவர்களுடைய கண்கள் வறண்டு விடுகின்றன. கண்கள் இமைப்பதன் மூலமே கண்கள் தங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை பராமரித்து வருகின்றன. இந்நிலையில் கணினி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கண்களை இமைக்காமல் பார்த்து வருகிறோம். அத்துடன் இரவிலும் போதிய வெளிச்சமில்லாமலும் இதனை உற்று கவனித்து வருகிறோம். இதனால் கண்கள் பாதிக்கப்படுகிறது. இதற்கு இது வரை மருந்து அதாவது ட்ராப்ஸ் வடிவில் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இதற்கான மருந்து கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை அங்குள்ள சுகாதர அமைப்பும் இதனை அங்கீகரித்திருக்கிறது. இந்த மருந்து விரைவில் தெற்காசியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.

Read more ...
21 07 2016

மூக்கடைப்பை குணப்படுத்தும் பொலிபெக்டமி

கோடைக்காலம், வசந்த காலம், பனி காலம், மழைக்காலம் என்றில்லாமல் எல்லா காலங்களிலும், எல்லா வயதினருக்கும் ஒவ்வாமை மற்றும் ஜலதோஷம் போன்ற காரணங்களால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் பணியாற்றும் குளிர்சாதன வசதிப் பொருத்தப்பட்ட அறை கூட மூக்கடைப்பிற்கு காரணமாக இருக்கிறது. சாதாரண மூக்கடைப்பு என்றால் ஒரு சிலருக்கு உடனடியாகவும், ஒரு சிலருக்கு ஒரு சில தினங்களுக்கு பிறகும் குணமாகிவிடும். அப்படி குணமாகவில்லையென்றால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திக்கவேண்டும்.

Read more ...
14 07 2016

பற்களை பாதுகாப்பது எப்படி

உலகில் பற் சிகிச்­சைக்­காக உப­யோ­கிக்கும் நவீன முன்­னணி கரு­விகள் தற்­போது எமது நாட்­டிலும் இருக்­கின்­றன. பிளாஸ்டிக் சத்­திர சிகிச்சை முதல் எந்­த­வொரு பல் நோய்க்கும் சிகிச்­சை­ய­ளிக்க முடி­யு­மாக இருக்­கின்­றது
எமது நாட்டில் 18க்கும் 26வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கே அதி­க­மாக பற்­களில் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆகை­யினால் சகல வய­தி­னரும் 6மாதங்­க­ளுக்கு ஒரு முறை பற் சிகிச்சை வைத்­தியர் ஒரு­வரை அணுகி பற்­களை பரீட்­சித்­துக் ­கொள்ள வேண்டும் என்­கிறார் கொட்­டாஞ்­சேனை பல் சிகிச்சை நிலை­யத்தின் ஸ்தாப­கரும் இலங்கை பல் வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் இலங்கை தனியார் வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலை­வ­ரு­மான வைத்­திய நிபுணர் மீராஸ் முக்தார்.பல் சுகா­தாரம் தொடர்­பாக அவ­ருடன் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் போது அவர் தெரி­வித்த கருத்­துக்கள் பின்­வ­ரு­மாறு

Read more ...