இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 1

30 04 2025 

இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 1

இந்­திய மாநி­லங்­கள் அனைத்­துக்­கு­மான உரி­மையை வாங்­கித் தரும் முன்­னெ­டுப்­பில் இறங்கி இருக்­கி­றார் ‘திரா­விட நாய­கன்’ – மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். “மாநில சுயாட்­சியை வென்­றெ­டுக்க சட்ட முன்­னெ­டுப்­பு­களை கழ­கம் மேற்­கொள்­ளும்” என்று திரா­விட முன்­னேற்­றக் கழக பவள விழா – முப்­பெரும் விழாப் பொதுக்­கூட்­டத்­தில் கடந்த செப்­டம்­பர் மாதம் உரை­யாற்­றிய மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரக்­கச் சொன்­னார்­கள்.

“நமது எல்­லாக் கன­வு­க­ளும் நிறை­வே­றி­விட்­டதா எனக் கேட்­டால்... இல்லை! மாநில உரி­மை­களை வழங்­கும் ஓர் ஒன்­றிய அரசு அமை­ய­வில்லை. நிதி உரிமை உள்­ளிட்ட கோரிக்­கை­க­ளுக்கு இன்­ன­மும் நாம் போராட வேண்­டிய நிலை தான் இருக்­கி­றது. பேர­றி­ஞர் அண்­ணா­வும் – தலை­வர் கலை­ஞ­ரும் வலி­யு­றுத்­திய மாநில சுயாட்­சிக் கொள்கை என்­பது நமது உயிர்­நா­டிக் கொள்­கை­க­ளில் ஒன்று. எல்லா அதி­கா­ர­மும் கொண்­ட­வை­க­ளாக மாநில அர­சு­களை மாற்­றும் வகை­யில், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் திருத்­தம் கொண்டு வர முயற்­சிக்­கும் சட்­ட­முன்­னெ­டுப்­பு­க­ளைத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நிச்­ச­ய­மாக, உறு­தி­யா­கச் செய்­யும்” என்று சொன்­னார் முத­ல­மைச்­சர்.

இப்­போது அதற்­கான முதல் முயற்­சி­யாக மாநில சுயாட்­சிக் குழுவை அமைத்­துள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள். ஐம்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் மாநில சுயாட்­சித் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­னால் அன்­றைய முத­ல­மைச்­சர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஒரு காட்­சியை விவ­ரித்­தார்­கள். அது ....

“சிறை­யி­லி­ருந்த நாடு, விடு­தலை பெற்று விட்­டது. கதவு திறந்­தது. பூட்­டிய இருப்­புக் கூட்­டி­லி­ருந்து கைதி, புன்­னகை மலர வெளியே வரு­கி­றான். தந்­தை­யைக் காணா­மல் தவித்­துக் கொண்­டி­ருந்த தளிர் நடைச் செல்­வம், இளங்­க­ரம் தூக்கி, தாவி­யோ­டு­கி­றது, அவ­னைத் தழு­விக்­கொள்ள! அவ­னும் அடக்க முடி­யாத மகிழ்ச்சி வெள்­ளம் கரை­பு­ரள மக­னைத் தூக்கி முத்­த­மி­டக் கரங்­களை நீட்­டு­கி­றான். கைகள் இயங்க முடி­யா­மல் தவிக்­கின்­றன. சிறை­யில் இருந்து தான் விடு­பட்­டு­விட்­டானே; இன்­னும் என்ன தடை?

தன்னை யார் தடுப்­பது? சுற்­றும் முற்­றும் பார்க்­கி­றான். அவன் சிறை­யில் இல்லை, சுதந்­திர பூமி­யில்­தான் இருக்­கி­றான். பிறகு யார், தன் குழந்­தை­யைக் கூடத் தழு­விட முடி­யா­மல் அவ­னைக் கட்­டுப்­ப­டுத்­து­வது? யாரு­மல்ல. அவன் சிறை­யி­லி­ருக்­கும்­போது அவன் கைகள் இரண்­டை­யும் காலை­யும் சேர்த்து ஒரு விலங்கு மாட்டி இருந்­தார்­கள். விடு­தலை அடைந்த பூரிப்­பில், விலங்­கு­க­ளைக் கழற்ற வேண்­டு­மென்ற நினைப்­பு­கூட இல்­லா­மல் அவன் வெளியே வந்­து­விட்­டான். அவன் சுதந்­திர மண்­ணில்­தான் இருக்­கி­றான்; கை, கால் விலங்கு மட்­டும் கழற்­றப்­பட­வில்லை. மனி­தன் விடு­த­லை­யா­கி­விட்­டான். கை, கால்­கள் மட்­டும் கட்­டுண்டு கிடக்­கத் தேவை­யில்­லையே! இந்­தியா, விடு­தலை பெற்­று­விட்­டது. அதன் அவ­ய­வங்­க­ளைப் போன்ற மாநி­லங்­கள் மட்­டும் மத்­திய அர­சுக்­குத் தேவை­யில்­லாத  அதி­கா­ரக் குவி­யல்­கள் என்­னும் விலங்­கு­க­ளால் கட்­டுண்டு கிடப்­பா­னேன்?” என்று கேட்­டார் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். இதோ இன்­றைய முதல்­வ­ரும் ஒரு காட்­சியை விவ­ரிக்­கி­றார்... “இந்­திய திரு­நாட்டை வளர்ச்­சிப் பாதை­யில் கொண்டு செல்­லும் மிகப்­பெ­ரும் பொறுப்பை மாநி­லங்­கள் ஏற்­றுக் கொண்­டுள்­ளன. கல்வி, சுகா­தா­ரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்­புற மேம்­பாடு என அனைத்­தை­யும் மாநி­லங்­கள் முன்­னெ­டுத்­துச் செல்­கின்­றன. ஆனால் அவற்­றை­யெல்­லாம் நிறை­வேற்­றி­டத் தேவை­யான அதி­கா­ரங்­கள் மாநி­லங்­க­ளி­டம் இருந்து பறிக்­கப்­பட்டு ஒன்­றிய அர­சி­டம் குவிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பசி­யால் வாடித் தவிக்­கும் தன்­னு­டைய குழந்­தைக்கு என்ன உணவு கொடுத்­திட வேண்­டும் என்­பது அந்த குழந்­தை­யின் தாய்க்­குத் தான் தெரி­யும். ஆனால், அந்த குழந்தை உண்­ணும் உணவை, கற்­கும் கல்­வியை, கடந்து செல்­லும் பாதை­யினை, டெல்­லி­யில் இருந்து யாரோ ஒரு­வர் தீர்­மா­னித்­தால் கரு­ணையே உரு­வான தாய்­மை­யும் பொங்கி எழத்­தானே செய்­யும்?” என்று உணர்ச்­சி­யாய் கேட்ட முத­ல­மைச்­சர் அவர்­கள், அதற்­கான வழி­மு­றை­யை­யும் வகுக்­கத் தொடங்கிவிட்­டார்.

இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் வழங்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­க­ளின் நியா­ய­மான உரி­மை­க­ளைப் பாது­காக்­க­வும், ஒன்­றி­ய–­மா­நில அர­சு­க­ளுக்கு இடை­யே­யான உற­வு­களை மேம்­ப­டுத்­தி­ட­வும், உச்ச நீதி­மன்ற மேனாள் நீதி­ய­ர­சர் திரு.குரி­யன் ஜோசப் அவர்­க­ளைத் தலை­வ­ரா­கக் கொண்ட குழுவை முத­ல­மைச்­சர் அவர்­கள் அமைத்­துள்­ளார்­கள். இதன் உறுப்­பி­னர்­க­ளாக, இந்­திய கடல்­சார் பல்­க­லைக் கழ­கத்­தின் மேனாள் துணை வேந்­த­ரும், ஓய்­வு­பெற்ற ஐ.ஏ.எஸ். அதி­கா­ரி­யு­மான அசோக் வர்­தன் ஷெட்டி, தமிழ்­நாடு மாநில திட்­டக் குழு­வின் மேனாள் துணைத்­த­லை­வர் பேரா­சி­ரி­யர் மு.நாக­நா­தன் ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். இக்­குழு தனது இடைக்­கால அறிக்­கையை ஜன­வரி மாத இறு­திக்­குள்ளும், இறுதி அறிக்­கையை இரண்டு ஆண்­டு­க­ளி­லும் அர­சுக்கு வழங்க வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் கேட்­டுக் கொண்­டுள்­ளார்­கள்.

1974 ஆம் ஆண்டு நீதி­பதி இரா­ஜ­மன்­னார் தலை­மை­யில் குழு அமைத்­தார் முத­ல­மைச்­சர் கலை­ஞர். அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் ஏழா­வது இணைப்­பில், மத்­தி­யப் பட்­டி­யல், மாநி­லப் பட்­டி­யல், பொதுப்­பட்­டி­யல் என்ற தலைப்­பு­க­ளில் நாடா­ளு­மன்றம் மாநி­லச் சட்­ட­மன்­றங்­கள் ஆகி­ய­வற்­றின் சட்­ட­மி­யற்­றும் அதி­கா­ரங்­கள் கூறப்­பட்­டுள்­ளன. அப் பட்­டி­யல்­க­ளில் பல்­வ­கைத் திருத்­தங்­கள் செய்­யப்­பட வேண்­டு­மென இரா­ஜ­மன்­னார் குழு கருத்­துரை வழங்­கி­யது. நாட்­டின் பாது­காப்பு, வெளி­நாட்டு உற­வு­கள், மாநி­லங்­க­ளுக்­கி­டையே போக்­கு­வ­ரத்­துத் தொடர்­பு­கள், நாண­யச் செலா­வணி ஆகி­யவை தொடர்­பான அதி­கா­ரங்­களை மட்­டும் கொண்­டுள்ள ஒன்­றிய அர­சும், எஞ்­சிய அதி­கா­ரங்­கள் உட்­பட ஏனைய அதி­கா­ரங்­கள் அனைத்­தை­யும் கொண்­டுள்ள மாநில அர­சு­க­ளும் உள்ள உண்­மை­யான கூட்­டாட்­சியை நிறு­வும் இலட்­சி­யத்­து­டன், தமிழ்­நாடு அரசு, இரா­ஜ­மன்­னார் குழு­வின் பரி­வு­ரை­களை ஆய்ந்­த­பின் ஏற்­றுக் கொண்­டது. அந்த வழித்­த­டத்­தில் தான் இன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள், நீதி­பதி குரி­யன் ஜோசப் தலை­மை­யி­லான குழுவை அமைத்­துள்­ளார்­கள். இது பேர­றி­ஞர் அண்­ணா­வின் ‘இறுதி உயிலை’ நிறை­வேற்­றும் செயல் ஆகும்.

– தொட­ரும்– murasoli.in 17 04 25