பார்வை - Yathaartham
16 02 25 உறவுகளும் உணர்வுகளும் (1) உறவுகள் என்பதற்கு வெறும் ‘குருதி உறவுகள்’ மட்டுமே என்ற குறுகிய பொருள் கொண்டு, குடும்பம் என்பதும் அதன் கூட்டுத் தொகையே என்று கருதிடாமல், காலத்தை வென்ற நமது நாகரிகம், பண்பாடு பறை சாற்றும் வழியில் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்! மானுடப் பரப்பை உறவுக்கு எல்லை என்று கருதி, நடந்து வந்த நமது வரலாற்றில், ‘யாதும் ஊரே – யாவரும் கேளிர் (உறவுகள்) என்ற விரிகடல் போன்ற உறவுகள்பற்றி எண்ணிய பெருமிதம், மானுட சமுத்திரத்தின் அலைஅலையாக என்றும் உள்ளன.கொள்கை லட்சிய உறவுகள் மிகவும் கெட்டியானவை அல்லவா – ரத்த உறவை விட!பள்ளி – கல்லூரி மாணவப் பருவ தோழமையும், நட்பும் – பலமான உறவுகளாக – அந்தந்த படிப்பு நிறுவனம்; தனது வகுப்புத் தோழர்களாகவோ அல்லது அந்த கல்விக்…
கற்றல் கற்பித்தலும் தாய்மொழியின் அடித்தளமும் 05 02 2025 மொழி என்பது மனிதர்கள் தங்களது எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகள் போன்றவற்றை வெளியிட உதவும் ஒரு கருவியாகும். மக்களை மாக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது மொழியாகும். மொழி மனித சமூகத்தின் அடையாளமாகும். ஒரு மொழியைப் பேசுகின்ற மக்களின் சமூகம், பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைப் பிரதிபலிப்பது சமூகவியலின் இயற்கையாகிய மொழி என்றால், கலை அறிவியல் போன்றவற்றைப் பிரதிபலிப்பது இலக்கியங்களின் மொழி எனலாம். அம்மொழியை கற்றல் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் உலகளாவிய நிலைக்கு உட்படுத்துவது கணினி மொழியாகும். சமகாலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களாகும். ஒரு மொழி பேசுகின்ற மக்களின் அகவாழ்வைப் பிரதிபலிப்பது கலை இலக்கியங்கள். புறவாழ்வைப் பிரதிபலிப்பது அறிவியல் இலக்கியங்கள். ஒரு மொழியில் உள்ள இலக்கியங்கள் அம்மொழியைப் பேசுகின்ற மானிட சமுதாயத்தின் பண்பாட்டு மரபுகள், பழக்க வழக்கங்கள், உறவு முறைகள்,…
26 08 2020 பகுத்தறிவு: ஒரு கணம் நில்லுங்கள்..முனைவர்.வா.நேரு,(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)சில செய்திகளைப் படிக்கிறபோது மனம் பதை பதைக்கிறது, நெஞ்சு பதறுகிறது, இப்படியெல்லாம் நிகழுமா, இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா? நடக்கிறதா? அய்யகோ என மனம் அரற்றுகிறது, அழுது புலம்ப துடிக்கிறது. என்னய்யா உலகம், பச்சைக்குழந்தை தன்னுடைய அப்பாவை நம்பாமல் உலகில் வேறு யாரை நம்பும்? அவன் ஒரு மூட நம்பிக்கை பிடித்த நோயாளி என்பதனை பச்சிளங்குழந்தை எப்படிக் கண்டு பிடிக்க இயலும்? பாடங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள்-இல்லையே,ஊடகங்களில் உண்டா மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் -இல்லையே,சிரிக்க சிரிக்க பேசும் நாவல்லவர்களைக் கொண்ட ஆன்மிகப் பட்டிமன்றங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் - இல்லையே? கேள்விகளை கேட்பதை ஊக்குவிக்கும் பாடத்தையா நாம் பள்ளியிலே பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம், இல்லையே, நொடியூர் கிராமத்து பன்னீரின்…
30 07 2020 பார்ப்பன ஆபாச கந்தனும் தமிழர் வழிபட்ட முருகனும் வேறு வேறு பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வரும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.கவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவரான பால்கனகராஜ். புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "நாத்திகக் கருத்துகளை பரப்புவது போல சிலர், 'கருப்பர் கூட்டம்' என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகின்றனர். அதில், ஆபாசப் புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து இது போன்ற கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில் கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப் பெருமானிடம் மனம் உருக பாடப்படும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது தண்டனைக்குரிய குற்றம்.…
25 07 2020 சாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார்? - நேரடி கள ஆய்வு சம்பவம் 1: கொரோனா தனிமனித சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும் இன்றைய நெருக்கடியான காலத்தில் காவல்துறையினரின் பல்வேறு சித்திரவதைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். இதன் உச்சகட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தகப்பன், மகன் என இருவர் சித்திரவதைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர்.கடந்த 18.6.2020 அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைவீதியில் கடைகளை அடைக்கச் சொல்லி காவல் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்கள் ரோந்து வந்துள்ளனர். அப்போது "GG பாக்கியம் டிரேடர்ஸ் மரக் கடைக்கு" முன்பாக, கடையில் வேலை செய்து வரும் துரை என்பவரோடு சுமார் ஐந்து நபர்கள் பேசிக் கொண்டு நின்றுள்ளார்கள். அப்போது அவ்விடத்திற்கு வந்த சார்பு…