22 07 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 162) தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கைகோர்த்துக்கொண்ட பின்னர், எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று, ‘உமா மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஏன் இணைத்துக் கொள்ளப்படவில்லை, அல்லது எப்போது இணைத்துக்கொள்ளப்படும்’ என்பதாகும்? அப்போதைய சூழ்நிலையில், இது சாத்தியப்படப்போவதில்லை என்பது, வௌிப்படையாக அனைவருக்கும் தெரிந்திருப்பினும், இந்தக் கேள்வி ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்திருந்த அன்டன் பாலசிங்கம், “போர்த் தந்திரோபாயம் தொடர்பான, அபிப்பிராய வேறுபாடுகளே, புளொட் இயக்கம் ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைத்துக்கொள்ளப்படாமைக்குக் காரணமாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “உமா மகேஸ்வரன், மக்களைப் பெருமளவில் ஒன்றுதிரட்டி,…
15 07 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 161) பிரிந்து நின்றவர்கள் நோக்கம் ஒன்று; ஆனால், அதை அடைவதற்காகப் பல பாதைகளில் புறப்பட்ட பல அமைப்புகள் ஒன்றோடொன்றும், தமக்குள்ளும் முரண்பட்டு, எதிரும் புதிருமாகத் திசைமாறிப் பயணிக்க ஆரம்பித்தன. ஈழத் தமிழ் மக்களுக்காகத் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, ஆயுதப்போராட்டமே ஒரேவழி எனத் தீர்மானித்த தமிழ் இளைஞர், ஆயுதம் தரித்த அமைப்புகளாக இயங்கினார்கள். இவை ஒவ்வொன்றினதும் உருவாக்கம், செயற்பாடுகள், பின்புலம் என்பன, தனித்து ஆராயப்படவேண்டியதொரு விடயம். அவற்றின் அடிப்படை நோக்கம், ஒன்றாக இருப்பினும், அதன் அரசியல், ஆதரவுப் பின்புலங்கள், அவை கொண்டிருந்த அரசியல் கொள்கைகள், கரிசனைகள் வேறுபட்டிருந்தன. இது பற்றிக் கருத்துரைக்கும் சிலர், இவற்றில் சில அமைப்புகள், முழுமையாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகச் சுட்டிக் காட்டுவதுடன், சில அமைப்புகள் இந்திய எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். மேலும், இந்த…
08 07 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 160) ராஜீவினுடைய ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ அணுகுமுறை ராஜீவ் காந்தியின் கீழான, இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையானது, அதற்கு முன்பிருந்த இந்திரா காந்தியின் கீழாக, இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகளிலிருந்து மாறுபட்டதல்ல என்று, 1987இல் வௌியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருத்துரைக்கும் ஹரிஷ் கபூர், ஆனால், ராஜீவின் பாணி வேறானதாக இருந்தது என்கிறார். நபருக்கு நபர், அரசியல் பாணி மாறுபடும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அவர், ராஜீவினுடைய பாணி ‘அரசியலற்ற முகாமைத்துவம்’ என்ற அணுகுமுறையில் அமைந்ததாகவும், அவரது முடிவெடுக்கும் முறை, எதேச்சதிகாரத் தன்மையைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். பிராந்திய மேலாதிக்கம் என்ற இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படை மாறவில்லை. ஆனால், ராஜீவ் அதை, இந்திரா காந்தியின் இரும்புக்கரம் கொண்ட அணுகுமுறையைவிட மாறுபட்டு, தன்னுடைய தனித்துவப் பாணியில் கையாள…
30 06 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 159) ராஜீவ்-லலித் சந்திப்பின் விளைவு ராஜீவ் காந்தி - லலித் அத்துலத்முதலி இடையேயான சந்திப்பு பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் குர்ஷித் ஆலம் கான், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில், இந்திய - இலங்கை உறவு தொடர்பான பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டனவெனவும் இலங்கை விரும்பும் பட்சத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும், ஆனால், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, இறுதியில் இலங்கை அரசாங்கமே காணவேண்டுமென்று இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ராஜீவ் காந்தி, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது பற்றி, பலமான முறையில் தனது கரிசனையை அத்துலத் முதலியிடம் குறிப்பிட்டதையும் குர்ஷித் ஆலம் கான், தன்னுடைய அறிக்கையில்…
23 06 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 158 லலித் அத்துலத்முதலி எனும் ஆட்சி நிபுணன் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கிய அழைப்பை, ஜே.ஆர் நேரடியாக மறுதலிக்காது ஏற்றுக்கொண்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், தனக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இன்னொரு வழியில் பார்த்தால், ராஜீவின் அழைப்பை, ஜே.ஆர், மறுத்திருந்தார் என்றும் பொருள் கொள்ள முடியும். ராஜீவ் காந்தி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்திருந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான உறவைச் சுமுகமான உறவாக, புதிதாக வடிவமைக்கவே ஜே.ஆர் விரும்பியிருந்தார். ஆகவே, அந்த உறவில், தன்னுடைய நிலையைப் பலப்படுத்த அவர் விரும்பியிருக்கலாம். அதற்கான இராஜதந்திர நகர்வாகக் கூட, இதைப் பொருள்…